என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துடியலூர் அருகே வாலிபர் கொலை - உடலை மீட்டு போலீசார் விசாரணை
Byமாலை மலர்17 Oct 2018 9:31 AM GMT (Updated: 17 Oct 2018 9:31 AM GMT)
துடியலூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் கணுவாய்- தாளியூர் ரோட்டில் உள்ள தடுப்பணை அருகே இன்று காலை சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியவில்லை. அவர் பார்ப்பதற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர் போல உள்ளார். அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு வேலை பார்ப்பவராக அவர் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறனர்.
கோவை துடியலூர் கணுவாய்- தாளியூர் ரோட்டில் உள்ள தடுப்பணை அருகே இன்று காலை சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியவில்லை. அவர் பார்ப்பதற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர் போல உள்ளார். அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு வேலை பார்ப்பவராக அவர் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X