search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடவள்ளி அருகே அரசு பஸ் மோதி மாணவன் பலி
    X

    வடவள்ளி அருகே அரசு பஸ் மோதி மாணவன் பலி

    வடவள்ளி அருகே அரசு பஸ் மோதி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    வடவள்ளி அருகே உள்ள கணபதி புதூரை சேர்ந்தவர் உதயராஜ். கட்டிட தொழிலாளி. இவரது மகன் சுபாஷ்(8). இவன் செல்வபுரம் சிவாலயா திரையரங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் பள்ளி முடிந்து எல்.ஐ.சி. காலனி அருகே வந்த போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் சுபாஷ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவனை அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலே அவன் இறந்தான்.அரசுப் பேருந்து மோதி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×