search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து - தொழிலாளி உள்பட 2 பேர் பலி
    X

    திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து - தொழிலாளி உள்பட 2 பேர் பலி

    திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர். இருவர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு டவுன் செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது33). கட்டிட தொழிலாளி. இவரது நண்பர் செல்வம். இருவரும் மோட்டார் சைக்கிளில் செங்கோடம்பாளையம் வேலாத்தாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கொல்லம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (19), இவரது நண்பர் பிரவீன் ஆகிய 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர்.

    அப்போது கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மேலும் மோதியதோடு நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த மினி லாரி மீது மோதியது.

    இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் உயிருக்கு போராடினர். இதைத்தொடர்ந்து அக்கம்-பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி கண்ணன், விக்னேஷ் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பிரவீன், செல்வம் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×