search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம்
    X

    பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம்

    நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியிலும் புயல் காரணமாக கன மழை பெய்தது.

    இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. தற்போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்துள்ளதால் அதன் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 133.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1116 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1907 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5504 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1190 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4666 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு நீர்மட்டம் 50.80 அடி. வரத்து 64 கனஅடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 15 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 1.8, கூடலூர் 2.6, வைகை அணை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×