என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம்
Byமாலை மலர்13 Oct 2018 9:37 AM GMT (Updated: 13 Oct 2018 9:37 AM GMT)
நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியிலும் புயல் காரணமாக கன மழை பெய்தது.
இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. தற்போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்துள்ளதால் அதன் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 133.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1116 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1907 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5504 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1190 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4666 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு நீர்மட்டம் 50.80 அடி. வரத்து 64 கனஅடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 15 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 1.8, கூடலூர் 2.6, வைகை அணை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியிலும் புயல் காரணமாக கன மழை பெய்தது.
இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. தற்போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்துள்ளதால் அதன் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 133.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1116 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1907 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5504 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1190 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4666 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு நீர்மட்டம் 50.80 அடி. வரத்து 64 கனஅடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 15 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 1.8, கூடலூர் 2.6, வைகை அணை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X