என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாழம்பூரில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது
திருப்போரூர்:
தாழம்பூர் ஏரிக்கரை பகுதியில் நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினர்.. இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் சோழிங்கநல்லூர் காந்திநகர் ஓடை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜான் சாலமன் (வயது 21) என்பது தெரியவந்தது.
அதேபகுதியைச் சேர்ந்த அரவிந்த் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் ஜான் சாலமனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இறந்து போன ஜான் சாலமன் காதலித்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அரவிந்த் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவியை கொடுமைப்படுத்தியதாக அரவிந்தை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்த அரவிந்த் தன்னுடைய மனைவி இறந்ததற்கும், தான் சிறைக்கு சென்றதற்கும் ஜான் சாலமன் தான் காரணம் என்று கருதினார்.
தனது நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்து சம்பவத்தன்று ஜான் சாலமனை மது குடிக்க தாழம் பூர் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனைவரும் மது அருந்தி உள்ளனர்.
மது போதையில் இருந்த ஜான்சாலமனை அவர்கள் அருகில் இருந்த மரக்கிளையை உடைத்து சராமாரியாக அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக தாழம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்த், பத்மநாபன், 16 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்