search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
    X

    மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

    கடலூரில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் துறைமுகம் சாலையில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 4 மூட்டைகளில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன.

    இதனைத் தொடர்ந்து அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அந்த வாலிபர் புதுவை பாகூர் மாதா கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி (21) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews

    Next Story
    ×