search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போளூர் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
    X

    போளூர் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

    போளூரில் மின்சாரம் தாக்கி இளம்பெண் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போளூர்:

    போளூர் கண்ணன் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி நிர்மலா (வயது32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று போளூரில் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வீட்டில் இருந்த நிர்மலா டி.வி.யில் பாதிப்பு ஏற்படுமோ என்று பயந்து கேபிள் வயரை டி.வியில் இருந்து கையால் பிடுங்கி எடுத்தார்.

    அப்போது மின்சாரம் தாக்கி நிர்மலா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×