என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்2 Oct 2018 4:16 PM GMT (Updated: 2 Oct 2018 4:16 PM GMT)
வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் சகோதரி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகில் உள்ள கிருங்காகோட்டையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் பழனிவேல் (வயது 25), திருமணமாகவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
3 தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து பழனிவேல் ஊர் திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு திருப்பத்தூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. ஜாதகம் பார்ப்பதற்காக சகோதரி வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சகோதரி வீட்டுக்கு வந்திருந்த பழனிவேல் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய சகோதரி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகில் உள்ள கிருங்காகோட்டையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் பழனிவேல் (வயது 25), திருமணமாகவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
3 தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து பழனிவேல் ஊர் திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு திருப்பத்தூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. ஜாதகம் பார்ப்பதற்காக சகோதரி வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சகோதரி வீட்டுக்கு வந்திருந்த பழனிவேல் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய சகோதரி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X