என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் தொடரும் சம்பவம்- மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்2 Oct 2018 3:50 PM GMT (Updated: 2 Oct 2018 3:50 PM GMT)
திருப்பூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 47). இவர் தனது மகளுடன் மொபட்டில் கடைக்கு புறப்பட்டார்.
கோர்ட் வீதி டி.எம்.எப் சுரங்க மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென உமாமகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டனர். இதுதொடர்பாக உமா மகேஸ்வரி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர பகுதியில் தொடர்ந்து தனியாக செல்லும் பெண்களிடமும், மொபட்டில் செல்லும் பெண்களையும் குறிவைத்து இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
திருப்பூர் தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 47). இவர் தனது மகளுடன் மொபட்டில் கடைக்கு புறப்பட்டார்.
கோர்ட் வீதி டி.எம்.எப் சுரங்க மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென உமாமகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டனர். இதுதொடர்பாக உமா மகேஸ்வரி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர பகுதியில் தொடர்ந்து தனியாக செல்லும் பெண்களிடமும், மொபட்டில் செல்லும் பெண்களையும் குறிவைத்து இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X