search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை பகுதியில் தொடர் மழை
    X

    நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை பகுதியில் தொடர் மழை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று செங்கோட்டை பகுதியிலும் கனமழை கொட்டியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று செங்கோட்டை பகுதியில் கனமழை கொட்டியது. குண்டாறு, அடவி நயினார் அணை பகுதிகளிலும் நன்றாக மழை பெய்தது. கடனாநதி அணை பகுதியிலும் நேற்று கனமழை கொட்டியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக செங்கோட்டையில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த படியாக கடனாநதி அணை பகுதியில் 21 மில்லி மீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 17 மில்லி மீட்டரும், தென்காசியில் 13 மில்லி மீட்டரும், மழை பெய்துள்ளது. மாநகர பகுதியான நெல்லையில் 2 மில்லி மீட்டரும், பாளையில் 3.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை பகுதியில் குறைந்த அளவாக 1 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட சற்று குறைந்து 104.15 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையில் தண்ணீர் எதுவும் இல்லை. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 11 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று 84.40 அடியாக உள்ளது.

    கடனாநதி-63, ராமநதி -47.25, கருப்பாநதி-58.07, குண்டாறு-32.38, வடக்கு பச்சையாறு-20, நம்பியாறு -19.94, கொடுமுடியாறு-31.75, அடவிநயினார்-85 அடிகளாக நீர்மட்டம் இன்று உள்ளது.

    களக்காட்டில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் கொளுத்துவதும், மதியத்திற்கு பின் வானம் மேகக்கூட்டங்களுடன் காணப்படுவதுமாக இருந்து வந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. சுற்றுவட்டாரத்தில் பெய்த போதும் களக்காட்டில் மழை பெய்யாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று களக்காட்டில் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மதியத்திற்கு பின்னர் வானில் மேகக் கூட்டங்கள் திரண்டன. அதன் பின் மாலை 4 மணியளவில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக மழை நீடித்தது.

    இந்த மழையினால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தெருக்களில் ஆறு போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தெருக்கள் வெள்ளக்காடானது. திருக்கல்யாணத்தெரு கருத்த விநாயகர் கோவில் முன் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    செங்கோட்டை-23, கடனாநதி-21, குண்டாறு-17, கருப்பாநதி-14, தென்காசி-13, ராமநதி-12, அடவிநயினார்-7, சங்கரன் கோவில்-6, சேர்வலாறு-6, அம்பை-5.2, பாளை-3.6, சிவகிரி-3, ராதாபுரம்-3, நெல்லை-2, ஆய்க்குடி-1.8, பாபநாசம்-1. #tamilnews
    Next Story
    ×