என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரத்த தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம் - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
Byமாலை மலர்30 Sep 2018 8:11 PM GMT (Updated: 30 Sep 2018 8:11 PM GMT)
தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
சென்னை:
மனித நேயத்தின் உச்சக் கட்ட வெளிப்பாடாக விளங்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் ‘ரத்த தானம் செய்வது மகிழ்ச்சிக்குரியது’ என்பதாகும்.
ரத்த தானம் செய்வது மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறியும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி மரிமாற்றக் குழுமம் இணைந்து, எண்ணற்ற ரத்த தான முகாம்களை நடத்தி வருவதுடன், ரத்த தானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், ஓர் ஆண்டில் 4 முறை ரத்த தானம் செய்த ஆண்கள் மற்றும் 3 முறை ரத்த தானம் செய்த பெண்கள், சிறந்த முறையில் பணியாற்றிய ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், அரசு ரத்த ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9 லட்சத்து 5 ஆயிரத்து 489 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 99 சதவீதம் ரத்தம் தன்னார்வ கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
தானங்களில் சிறந்தது ரத்த தானம் என்பதால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, ரத்த தானம் குறித்து மக்களிடம் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் விளைவாக, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழநாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு நூறு சதவீதம் இலக்கை எட்ட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
மனித நேயத்தின் உச்சக் கட்ட வெளிப்பாடாக விளங்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் ‘ரத்த தானம் செய்வது மகிழ்ச்சிக்குரியது’ என்பதாகும்.
ரத்த தானம் செய்வது மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறியும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி மரிமாற்றக் குழுமம் இணைந்து, எண்ணற்ற ரத்த தான முகாம்களை நடத்தி வருவதுடன், ரத்த தானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், ஓர் ஆண்டில் 4 முறை ரத்த தானம் செய்த ஆண்கள் மற்றும் 3 முறை ரத்த தானம் செய்த பெண்கள், சிறந்த முறையில் பணியாற்றிய ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், அரசு ரத்த ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9 லட்சத்து 5 ஆயிரத்து 489 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 99 சதவீதம் ரத்தம் தன்னார்வ கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
தானங்களில் சிறந்தது ரத்த தானம் என்பதால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, ரத்த தானம் குறித்து மக்களிடம் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் விளைவாக, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழநாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு நூறு சதவீதம் இலக்கை எட்ட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X