search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    தருமபுரி அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    தருமபுரி அருகே வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி திரிந்து கொண்டிருந்த மகனை தாய் திட்டியதால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி எக்ஹாடஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களுக்கு சிவன் என்கிற சிவராஜ் (வயது 20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். சிவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. 

    இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு எந்த வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் கடந்த 27-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பெற்றோர்கள் சிவனை காணாமல் போனதால் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

    இந்த நிலையில் ராஜாவின் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் ஒரு மரத்தில் சிவன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர்கள் அங்கு வந்து சிவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

    இதுகுறித்து ராஜா பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் சிவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  சிவன் தனது தாய் திட்டியதால் தூக்குபோட்டு கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×