என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாங்கண்ணி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது - டிராக்டர்கள் பறிமுதல்
Byமாலை மலர்27 Sep 2018 5:38 PM GMT (Updated: 27 Sep 2018 5:38 PM GMT)
வேளாங்கண்ணி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி அருகே உள்ள முப்பத்திகோட்டகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 டிராக்டர்கள் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தன. அவற்றை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முப்பத்திகோட்டகத்தில் உள்ள வெள்ளையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த கீழ்வேளூர் தாலுகா மோகனூர் கீழத்தெருவை சேர்ந்த ஜோதி மகன் தெட்சிணாமூர்த்தி (வயது32), திருப்பூண்டி வீரன் கோவில் தெருவை சேர்ந்த முத்தலீப் மகன் சாகுல்அமீது (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி அருகே உள்ள முப்பத்திகோட்டகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 டிராக்டர்கள் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தன. அவற்றை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முப்பத்திகோட்டகத்தில் உள்ள வெள்ளையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த கீழ்வேளூர் தாலுகா மோகனூர் கீழத்தெருவை சேர்ந்த ஜோதி மகன் தெட்சிணாமூர்த்தி (வயது32), திருப்பூண்டி வீரன் கோவில் தெருவை சேர்ந்த முத்தலீப் மகன் சாகுல்அமீது (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X