search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் ரவுடி கொலை: 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
    X

    திண்டுக்கல் ரவுடி கொலை: 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

    திண்டுக்கல் ரவுடி கொலை வழக்கில் சிறையில் உள்ள 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Murder

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சின்னபொன் மாந்துரையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 36). இவர் மீது 2 கொலைகள் உள்பட வழிப்பறி, கொலை முயற்சி, என 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    கடந்த சில மாதங்களாக வெளியூரில் வசித்து வந்த பாஸ்கர் கடந்த வாரம் திண்டுக்கல் வந்தார். கடந்த திங்கட்கிழமை மாலையில் தோமையார்புரம் அருகே நின்று கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கொலையில் தொடர்புடைய பொன் மாந்துரையைச் சேர்ந்த சண்முகவேல், ஸ்ரீரங்கம், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் கோவை கோர்ட்டில் சரணடைந்தனர்.

    அதன் பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் தெற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக மதுரை மத்திய சிறையில் இருந்த 3 பேரையும் திண்டுக்கல் ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்பு விசாரணை நடைபெற்றது.

    Next Story
    ×