என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் ரவுடி கொலை: 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் சின்னபொன் மாந்துரையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 36). இவர் மீது 2 கொலைகள் உள்பட வழிப்பறி, கொலை முயற்சி, என 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த சில மாதங்களாக வெளியூரில் வசித்து வந்த பாஸ்கர் கடந்த வாரம் திண்டுக்கல் வந்தார். கடந்த திங்கட்கிழமை மாலையில் தோமையார்புரம் அருகே நின்று கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கொலையில் தொடர்புடைய பொன் மாந்துரையைச் சேர்ந்த சண்முகவேல், ஸ்ரீரங்கம், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் கோவை கோர்ட்டில் சரணடைந்தனர்.
அதன் பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் தெற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக மதுரை மத்திய சிறையில் இருந்த 3 பேரையும் திண்டுக்கல் ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்பு விசாரணை நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்