search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் 4 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
    X

    மதுரையில் 4 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

    கஞ்சா விற்றதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 1/2 கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    காளவாசல் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கரிமெடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்றதாக ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி பஞ்சவர்ணம் (வயது 79) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சா, ரூ.27 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கஞ்சா வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர். அதனை பயன்படுத்தி வந்த கண்மாய்க்கரை கரண் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்லூர் வைகை வடக்குநதி படுகை குமரன்சாலை சந்திப்பில் கஞ்சா விற்றதாக மேலத்தோப்பு காக்காச்சி சந்து பகுதியைச் சேர்ந்த தங்கம் மகன் ஏழாயிரம் (18), ராஜா மனைவி வனிதா (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×