என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் 4 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
மதுரை:
மதுரை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காளவாசல் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கரிமெடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்றதாக ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி பஞ்சவர்ணம் (வயது 79) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சா, ரூ.27 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கஞ்சா வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர். அதனை பயன்படுத்தி வந்த கண்மாய்க்கரை கரண் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்லூர் வைகை வடக்குநதி படுகை குமரன்சாலை சந்திப்பில் கஞ்சா விற்றதாக மேலத்தோப்பு காக்காச்சி சந்து பகுதியைச் சேர்ந்த தங்கம் மகன் ஏழாயிரம் (18), ராஜா மனைவி வனிதா (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்