search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    தாரமங்கலம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் 30-க் கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள வணிச்சம்பட்டி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இன்று காலை 30-க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீசார் விடவில்லை. நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பொதுமக்கள் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. சுமார் 2000 பேர் வசித்து வருகிறார்கள். சுமார் 6 மாத காலமாக குடிநீர் வரவில்லை. இது பற்றி தாரமங்கலம்  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. ஊரில் போடப்பட்டுள்ள 2 ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை. எனவே, எங்கள் கிராமத்திற்கு கலெக்டர் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பின்னர், இது தொடர்பாக 5 பேர் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுத்தார்கள்.
    Next Story
    ×