search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public demonstration"

    • மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வீரமா ணிக்கபுரம் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வீரமாணிக்கபுரம் 43-வது வார்டு பகுதியில் சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளது.

    நெல்லை:

    மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வீரமாணிக்கபுரம் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் நாட்டாண்மை பொன்ராஜ் தலைமையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரி யப்பபாண்டியன், தமிழ்நாடு தேவேந்திரகுல மக்கள் பாதுகாப்பு பேரவை குணா பாண்டியன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, வீரமாணிக்கபுரம் 43-வது வார்டு பகுதியில் சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளது. ஆனால் இப்பகுதியில் குடிநீர் இணைப்பு, பாதாளச்சாக்கடை, விளையாட்டு பூங்கா, நூலகவசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை.

    இது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.எனவே உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    அரியலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணக்குடையான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சோழன்பட்டி பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை அருகிலுள்ள தனியார் சிமெண்டு நிறுவனம் ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருகிறது.

    இதனை கண்டித்து சோழன்பட்டி, தாமரைப்பூண்டி, ஆதனக்குறிச்சி, மணக்குடையான் பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன் தலைமை தாங்கினார். இதில் மணக்குடையான் ஊராட்சி தாமரைப்பூண்டி-சோழன்பட்டி சாலையை பஞ்சாயத்து தீர்மானத்தை மீறி ஆக்கிரமிக்காதே, சுரங்கத்தில் வெடிவைத்து கர்ப்பிணி சிசுவை அழிக்காதே, சோழன்பட்டிக்கு அருகில் மணல்மேடு அமைத்து ஊர் முழுவதும் புழுதியை கிளப்பி நுரையீரல் தொற்றை ஏற்படுத்தாதே, சுரங்கத்தை சுற்றி 33 சதவீதம் பசுமை பகுதி ஏற்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம், வைத்திலிங்கம், நீலமேகம், கணேசன், கலியபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி பாலசிங்கம், மதியழகன், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தாரமங்கலம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் 30-க் கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள வணிச்சம்பட்டி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இன்று காலை 30-க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீசார் விடவில்லை. நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பொதுமக்கள் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. சுமார் 2000 பேர் வசித்து வருகிறார்கள். சுமார் 6 மாத காலமாக குடிநீர் வரவில்லை. இது பற்றி தாரமங்கலம்  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. ஊரில் போடப்பட்டுள்ள 2 ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை. எனவே, எங்கள் கிராமத்திற்கு கலெக்டர் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பின்னர், இது தொடர்பாக 5 பேர் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுத்தார்கள்.
    ×