என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காட்பாடி வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
வேலூர்:
காட்பாடி சோலைநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). காட்பாடி போலீஸ் நிலையம் எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்றார்.
இதனை பயன்படுத்தி கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு முன்பக்க கதவை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், கம்மல்கள் உள்ளிட்ட 10½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
காட்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காட்பாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் எண்ணை தடவி கொண்டு வீடுபுகுந்து கொள்ளையடிக்க முயன்ற நெல்லை வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காட்பாடி பகுதியில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.
கொள்ளை சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்