search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் நிறுவன உரிமம் ரத்து- கலெக்டர் எச்சரிக்கை
    X

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் நிறுவன உரிமம் ரத்து- கலெக்டர் எச்சரிக்கை

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நிறுவன உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருப்பூர் கலெக்டர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 20162 உணவு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 19004 நபர்கள் உரிமம்- பதிவு பெற்றுள்ளனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்ற பின்பே உணவுத் தொழில் புரிய வேண்டும். அவ்வாறு உரிமம், பதிவு பெறாதவர்கள் மீது பிரிவு 63, 55-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    உணவு பாதுகாப்பு துறையில், உணவின் தரம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, கலப்பட டீத்தூள், போலி குடிநீர் நிறுவனங்கள், கலப்படம் மற்றும் போலி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள்

    ஆகியவை குறித்து 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். அதன்மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக புகையிலைப் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×