search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குலசேகரம் போலீசில் தஞ்சம் அடைந்த ஜோய், சுபி ஜோடி
    X
    குலசேகரம் போலீசில் தஞ்சம் அடைந்த ஜோய், சுபி ஜோடி

    பெயிண்டருடன் விதவை பெண் போலீசில் தஞ்சம்- குழந்தைகளை தர மறுத்து உறவினர்கள் தகராறு

    குலசேகரம் அருகே பெயிண்டருடன் விதவை பெண் போலீசில் தஞ்சம் அடைந்தது குறித்து அவரது குழந்தைகளை தர மறுத்து உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
    குலசேகரம்:

    குலசேகரத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோய் (வயது 41). பெயிண்டர்.

    ஜோய்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் இவர் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். இவரது வீடு அருகே வசித்து வந்தவர் சுபி (30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    சுபியின் கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் சுபி, தன் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

    பெயிண்டர் ஜோய், தினமும் வேலைக்கு செல்லும் போது சுபியின் வீட்டை தாண்டி செல்ல வேண்டும். அப்போது இருவரும் சந்தித்து பேசிகொள்வது வழக்கம். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

    இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று ஜோய்யும், சுபியும் கருதினர். எனவே அவர்கள் இருவரும் நேற்று குலசேகரம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் மேஜர் என்பதால், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே பெயிண்டர் ஜோயுடன், சுபி போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் சுபியின் உறவினர்களுக்கு தெரியவந்தது.

    அவர்கள் உடனே சுபியின் வீட்டுக்கு சென்று அவரது இரண்டு குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர். போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய சுபி, குழந்தைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர்கள் உறவினர் வீடுகளில் இருப்பதை அறிந்து அவர்களை தேடி சென்றார். அப்போது உறவினர்கள், சுபியிடம் குழந்தைகளை கொடுக்க மறுத்து தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.

    இதையடுத்து சுபி, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கேட்டு போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×