search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொட்டியம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் - 2 பேர் கைது
    X

    தொட்டியம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் - 2 பேர் கைது

    தொட்டியம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள காவிரிக்கரையோரங்களில் மணல் கடத்தப்படுவதாக தொட்டியம் வருவாய் துறைக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து தொட்டியம் வருவாய் அதிகாரி காத்தான் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொட்டியம் மொடக்கு சாலை அருகே வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வருவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து தொட்டியம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் தொட்டியம் கோட்டை மேட்டை சேர்ந்த பொன்னர் மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×