search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே வியாபாரி வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    மேட்டுப்பாளையம் அருகே வியாபாரி வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்

    மேட்டுப்பாளையம் அருகே வியாபாரி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.24 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை கெம்பே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் ஹான்ஸ், பான்மசாலா உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக சிறுமுகை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில் சிறுமுகை இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, விக்னேஷ் மற்றும் போலீசார் கெம்பேகவுடர் வீதியைச் சேர்ந்த லோகநாதன் (வயது 40) என்பவரது வீட்டிலும், கடையிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    அங்கு இருந்து ஹான்ஸ், பான்மசாலா உள்பட ரூ.24 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த லோகநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×