என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையம் அருகே வியாபாரி வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்10 Sep 2018 12:15 PM GMT
மேட்டுப்பாளையம் அருகே வியாபாரி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.24 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை கெம்பே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் ஹான்ஸ், பான்மசாலா உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக சிறுமுகை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில் சிறுமுகை இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, விக்னேஷ் மற்றும் போலீசார் கெம்பேகவுடர் வீதியைச் சேர்ந்த லோகநாதன் (வயது 40) என்பவரது வீட்டிலும், கடையிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அங்கு இருந்து ஹான்ஸ், பான்மசாலா உள்பட ரூ.24 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த லோகநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை கெம்பே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் ஹான்ஸ், பான்மசாலா உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக சிறுமுகை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில் சிறுமுகை இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, விக்னேஷ் மற்றும் போலீசார் கெம்பேகவுடர் வீதியைச் சேர்ந்த லோகநாதன் (வயது 40) என்பவரது வீட்டிலும், கடையிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அங்கு இருந்து ஹான்ஸ், பான்மசாலா உள்பட ரூ.24 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த லோகநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X