என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9-ந்தேதி சிறப்பு முகாம்
Byமாலை மலர்7 Sep 2018 11:31 AM GMT (Updated: 7 Sep 2018 11:31 AM GMT)
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.
வேலூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2019 ஜனவரியில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதில், பெயர் சேர்த்தலுக்காக 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம் 6) பெயர் நீக்கம் செய்ய 56 ஆயிரம் விண்ணப்பங்கள் (படிவம்7), திருத்தம் செய்ய 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம்8ஏ) ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது.
அத்துடன், ஒவ்வொரு விண்ணப்ப படிவத்தில் இருந்தும், எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை கணக்கீடு செய்வதற்கான அப்ஸ்ட்ராக்ட் படிவங்களையும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்து 500 படிவங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு தாலுகாவுக்கும் தலா 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை உரிய ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து கலர் போட்டோவுடன் அங்கேயே வழங்கலாம்.
எந்த ஓட்டுச்சாவடி மையத்திலாவது படிவங்கள் இல்லை என்றால், அங்கிருக்கும் ஓட்டுச்சாவடி அதிகாரி, மண்டல அதிகாரியை தொடர்பு கொண்டால் உடனடியாக படிவங்கள் கொண்டு வந்து தரப்படும்.
இவ்வாறுஅவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2019 ஜனவரியில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதில், பெயர் சேர்த்தலுக்காக 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம் 6) பெயர் நீக்கம் செய்ய 56 ஆயிரம் விண்ணப்பங்கள் (படிவம்7), திருத்தம் செய்ய 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம்8ஏ) ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது.
அத்துடன், ஒவ்வொரு விண்ணப்ப படிவத்தில் இருந்தும், எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை கணக்கீடு செய்வதற்கான அப்ஸ்ட்ராக்ட் படிவங்களையும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்து 500 படிவங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு தாலுகாவுக்கும் தலா 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை உரிய ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து கலர் போட்டோவுடன் அங்கேயே வழங்கலாம்.
எந்த ஓட்டுச்சாவடி மையத்திலாவது படிவங்கள் இல்லை என்றால், அங்கிருக்கும் ஓட்டுச்சாவடி அதிகாரி, மண்டல அதிகாரியை தொடர்பு கொண்டால் உடனடியாக படிவங்கள் கொண்டு வந்து தரப்படும்.
இவ்வாறுஅவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X