என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கொள்ளையடிக்க வந்த வீட்டில் தூங்கிய திருடர்கள் - 6 பவுன் நகையுடன் ஓட்டம்
Byமாலை மலர்7 Sep 2018 10:26 AM GMT (Updated: 7 Sep 2018 10:26 AM GMT)
மதுரையில் கொள்ளையடிக்க வந்த வீட்டில் தூங்கிய திருடர்கள் 6 பவுன் நகையுடன் தப்பி ஓடிய சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை:
மதுரை உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது31). இவர் மேலூர் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.
நேற்று உதயகுமார் மற்றும் தனது குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பால்கனி வழியாக வீட்டிற்குள் புகுந்தனர்.
பின்னர் அந்த கும்பல் வீட்டில் உள்ள பல அறைகளை சல்லடை போட்டு தேடினர். ஆனால் நகைகள் சிக்கவில்லை. இறுதியாக மறைவான இடத்தில் 6 பவுன் நகை இருந்தது. அதை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள் களைப்பில் வீட்டிலேயே தூங்கி விட்டனர்.
சிறிது நேரத்தில் உதயகுமாரின் மனைவி தண்ணீர் குடிப்பதற்காக வீட்டிற்குள் வந்தார் அப்போது மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருப்பதை கண்ட அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
இந்த சத்தத்தை கேட்டு எழுந்த திருடர்கள் அவசர அவசரமாக உதயகுமாரின் மனைவியை தள்ளி விட்டு நகையுடன் அங்கிருந்து தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது31). இவர் மேலூர் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.
நேற்று உதயகுமார் மற்றும் தனது குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பால்கனி வழியாக வீட்டிற்குள் புகுந்தனர்.
பின்னர் அந்த கும்பல் வீட்டில் உள்ள பல அறைகளை சல்லடை போட்டு தேடினர். ஆனால் நகைகள் சிக்கவில்லை. இறுதியாக மறைவான இடத்தில் 6 பவுன் நகை இருந்தது. அதை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள் களைப்பில் வீட்டிலேயே தூங்கி விட்டனர்.
சிறிது நேரத்தில் உதயகுமாரின் மனைவி தண்ணீர் குடிப்பதற்காக வீட்டிற்குள் வந்தார் அப்போது மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருப்பதை கண்ட அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
இந்த சத்தத்தை கேட்டு எழுந்த திருடர்கள் அவசர அவசரமாக உதயகுமாரின் மனைவியை தள்ளி விட்டு நகையுடன் அங்கிருந்து தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X