என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை
Byமாலை மலர்7 Sep 2018 9:55 AM GMT (Updated: 7 Sep 2018 9:55 AM GMT)
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் இருந்து இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடித்த நன்னடத்தை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. இதன்படி கோவை மத்திய சிறையில் இருந்து 2 கட்டமாக 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுபற்றி முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் கைதிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் கோவை சிறைச்சாலைக்கு அதிகாலையிலேயே வந்தனர். காலை 7 மணிக்கு மேல் 40 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடித்த நன்னடத்தை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. இதன்படி கோவை மத்திய சிறையில் இருந்து 2 கட்டமாக 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுபற்றி முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் கைதிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் கோவை சிறைச்சாலைக்கு அதிகாலையிலேயே வந்தனர். காலை 7 மணிக்கு மேல் 40 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X