search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் இருந்து இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    கோவை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடித்த நன்னடத்தை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. இதன்படி கோவை மத்திய சிறையில் இருந்து 2 கட்டமாக 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுபற்றி முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் கைதிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் கோவை சிறைச்சாலைக்கு அதிகாலையிலேயே வந்தனர். காலை 7 மணிக்கு மேல் 40 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    Next Story
    ×