search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Century Ceremony"

    எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 1,457 கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony #Releaseofprisoners
    சென்னை:

    எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 1,775 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.



    இந்த முடிவு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள கைதிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை வட்டாரம் கூறியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  #MGRCenturyCeremony  #Releaseofprisoners
    எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து 18 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony #PrisonersReleased
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய அரசு முடிவெடுத்தது.

    இதன்படி தமிழகம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து 12 கட்டங்களாக 221 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ராஜலிங்கம், அப்பாஸ் என்கிற சையது அப்பாஸ், ஜோதி, பாண்டியன், ராஜரத்தினம், சாமிக்கண்ணு, பாக்கியம், சந்திரன், முகமது என்கிற அசோக், ஆறுமுகம், அந்தோணி, நாகராஜ், ஜேசுராஜா, வேலுசாமி, முத்து என்கிற நாச்சிமுத்து, ஆரோக்கியசாமி, சேகர்ராஜ், சுப்பையா ஆகிய 18 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதுவரை 239 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony  #PrisonersReleased



    பாளை சிறையில் இருந்து நேற்று காலையில் மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    நெல்லை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். பாளை மத்திய சிறையில் இருந்து ஏற்கனவே 6 கட்டமாக 41 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கைதிகளின் நன்னடத்தைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 11-ந் தேதி மேலும் 44 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் 17-ந் தேதி 23 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 180 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் பாளை சிறையில் இருந்து மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை பாளை மத்திய சிறையில் இருந்து 238 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். #MGRCenturyCeremony #Jayakumar #Susheela
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழாவாக இன்று சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் அதிக அளவிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.



    இந்த விழாவின் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாட்டுக்கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரும் முக்கிய பாடகராக வலம்வருகிறார்.

    பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

    ஏற்கனவே கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. #MGRCenturyCeremony #Jayakumar #Susheela
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 3 பெண் கைதிகள் உள்பட 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது என்று அரசு முடிவெடுத்துள்ளது.

    அதன்படி ஜெயில் கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து இதுவரை 8 கட்டங்களாக கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று 9-வது கட்டமாக 3 பெண்கள் உள்பட 16 பேர் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் இருந்து விடுதலையான 16 பேரையும் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். #MGRCenturyCeremony

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 3 பெண் கைதிகள் உள்பட மேலும் 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 6 கட்டங்களாக மொத்தம் 63 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 7வது கட்டமாக இன்று காலை மேலும் 29 ஆண் கைதிகள் மற்றும் 3 பெண் கைதிகள் என 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 32 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்த தற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    அதன்படி, இதுவரை மொத்தம் 95 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர். #MGRCenturyCeremony

    மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 30-ந்தேதி நிறைவு பெறுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். #MGRCenturyCeremony #EdappadiPalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பிறந்தநாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும்போதும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தித்துறை இயக்குனர் பொ.சங்கர், கூடுதல் இயக்குனர் எழிலழகன் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி, விழாவை சிறப்பாக நடத்தி முடிக்கிறார்.



    முன்னதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உடனடியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குழு அமைக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுரையில் கடந்த ஆண்டு (2017) ஜூன் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டு, 31-வது மாவட்டமாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பயணம் தலைநகர் சென்னையில் வருகிற 30-ந்தேதி நிறைவு பெற உள்ளது. இந்த நிறைவு விழாவை ஒட்டுமொத்த எம்.ஜி.ஆர். விசுவாசிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாட்டை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.

    தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்து இருக்கிறார். 7 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன.

    விழா நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுடன் இணைந்து தமிழ்நாடு பொன் விழாவும் நடைபெற உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர். பகல் 2 மணியளவில், விழா மேடையில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் வாழ்த்துரை பட்டியலில் எதிர்க்கட்சித்தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பெயரும் இடம் பெற்றுள்ளது.  #MGRCenturyCeremony #EdappadiPalaniswami
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் இருந்து இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    கோவை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடித்த நன்னடத்தை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. இதன்படி கோவை மத்திய சிறையில் இருந்து 2 கட்டமாக 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுபற்றி முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் கைதிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் கோவை சிறைச்சாலைக்கு அதிகாலையிலேயே வந்தனர். காலை 7 மணிக்கு மேல் 40 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 5-வது கட்டமாக இன்று காலை மேலும் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார். 25-ந் தேதி 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 5-வது கட்டமாக இன்று காலை மேலும் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 16 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.  #MGRCenturyCeremony



    எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி இன்று 3-வது கட்டமாக வேலூர் ஜெயிலில் இருந்து சீனிவாசன் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். வேலூர் ஜெயிலில் இருந்து முதற்கட்டமாக 7 பேரும் 2-வது கட்டமாக 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இன்று 3-வது கட்டமாக சீனிவாசன் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 2-வது கட்டமாக விடுவிக்கப்பட்ட 24 கைதிகள் ஜெயில் வாழ்க்கை எங்களை புது மனிதனாக மாற்றியுள்ளது என்று கூறினர். #MGRCenturyCeremony
    வேலூர்:

    தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்தார்.

    இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், விதிகளின்படி மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய, தகுதியான நபர்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.

    இதன் அடிப்படையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 பெண் கைதிகள் உள்பட 200 கைதிகளை விடுதலை செய்வதற்கான பட்டியல் கூடுதல் காவல் துறை இயக்குநர் (சிறைத் துறை) அலுவலகத்துக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    2-வது கட்டமாக மேலும் 24 பேரை விடுதலை செய்வதற்கான ஆணை நேற்று இரவு வேலூர் சிறைக்கு வந்தது. இதையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு ஜெயிலில் இருந்து 24 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

    கைதிகளுக்கு உடமைகள், சிறையில் வேலை பார்த்ததற்கான கூலி பணம் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    சிறைக்கு வெளியே காத்திருந்த கைதிகளின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவர்களை கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.

    வேலூர் ஜெயிலில் இருந்து வந்த கைதிகள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    நாங்கள் போதையிலும், சூழ்நிலை காரணமாக தவறு செய்து ஜெயில் தண்டனை பெற்றோம். ஜெயிலுக்குள் செல்லும் போது பயமாகவும், கஷ்டமாகவும் இருந்தது.

    குடும்பத்தினரை பிரிந்து மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால் ஜெயிலில் எங்களுக்கு பல தொழில்கள் கற்று தந்தனர். உள்ளே இருந்ததால் பீடி, சிகரெட், மது பழக்கங்களை அடியோடு விட்டு விட்டோம். பூமியில் இன்று மீண்டும் குழந்தையாக பிறந்தது போல உள்ளது.

    ஜெயிலில் கற்று கொடுத்த தொழில்கள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இனிமேல் வாழும் வாழ்க்கைதான் எங்களுக்கு உண்மையான வாழ்க்கை எங்களை விடுதலை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #MGRCenturyCeremony

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் ஜெயிலில் இருந்து முதற்கட்டமாக 7 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகளிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்தது.

    சட்டசபையிலும் இது பற்றி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி பேசி இருந்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு சிறையிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளின் விவரங்களை அரசு பட்டியல் எடுத்து வைத்துள்ளது. 60 வயதுக்கு மேல் 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் ஆகியோரது நன்னடத்தை விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

    வேலூர் ஜெயிலில் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாகும் தகுதியில் உள்ளனர். இவர்கள் குறித்த பட்டியல் அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

    அதில் முதற்கட்டமாக 7 பேரை விடுதலை செய்வதற்கான ஆணை நேற்று இரவு வேலூர் ஜெயிலுக்கு வந்தது. இதையடுத்து இன்று காலை ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) முருகேசன், 7 பேருக்கும் அவர்களது உடமைகள், ஜெயிலில் கைதிகள் வேலை பார்த்ததற்கான கூலி பணம் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தார்.

    ஜெயிலுக்கு வெளியே காத்திருந்த கைதிகளின் மனைவி, குழந்தைள் மற்றும் உறவினர்கள் அவர்களை கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.

    ×