search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்ததால் ஆத்திரம்- கண்டக்டரை தாக்கிய பிளஸ்-2 மாணவர் கைது
    X

    படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்ததால் ஆத்திரம்- கண்டக்டரை தாக்கிய பிளஸ்-2 மாணவர் கைது

    பொன்னேரியில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த கண்டக்டரை தாக்கிய பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியில் இருந்து செங்குன்றம் நோக்கி அரசு பஸ் சென்றது. கண்டக்டராக கண்ணன் இருந்தார்.

    பஸ்சில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். அவர்களை கண்டக்டர் கண்ணன் கண்டித்தார்.

    பொன்னேரி பணிமனை அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென கண்டக்டர் கண்ணனை மாணவர் ஒருவர் சரமாரியாக தாக்கினார்.

    இது குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி அரசு பள்ளியில் படிக்கும் 17 வயதான பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    Next Story
    ×