search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வெவ்வேறு விபத்துக்கள்: வாலிபர்-பெண் உடல் நசுங்கி பலி
    X

    மதுரையில் வெவ்வேறு விபத்துக்கள்: வாலிபர்-பெண் உடல் நசுங்கி பலி

    மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் வாலிபர்-பெண் பரிதாபமாக இறந்தனர்.

    மதுரை:

    மதுரை ஆத்திக்குளம் காவேரி தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 27). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கே.கே. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    வாக்கர்ஸ் பார்க் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதில் கேசவன் கீழே விழந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் அவர் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கிய அவர் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம் காமராஜர் புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50). இவர் மதுரை-மேலூர் ரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்தார்.

    அவர் ரோட்டை கடக்க முயன்றபோது வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி அங்குள்ள தனியார் ஆஸ்பததிரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இரண்டு விபத்துக்கள் குறித்தும் கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×