search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் திமுகவினர் கோஷ்டி மோதல்- 2 பேர் மண்டை உடைப்பு
    X

    கிருஷ்ணகிரியில் திமுகவினர் கோஷ்டி மோதல்- 2 பேர் மண்டை உடைப்பு

    கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பு பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு மண்டை உடைந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில் தி.மு.க. நகர செயலாளர் நவாப் தலைமையில் ஒரு கோஷ்டியினரும், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அஸ்லாம் தலைமையில் இன்னொரு கோஷ்டியினரும் மோதலில் ஈடுபட்டனர். இதில் அன்சர், அபியுல்லா ஆகிய 2 பேர் தாக்கப்பட்டு அவர்களது மண்டை உடைந்தது. அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×