search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகை- பணம் கொள்ளை
    X

    வெம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகை- பணம் கொள்ளை

    வெம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் புகுந்து 25 பவுன் தங்க நகைகள் ரூ 1 1/2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள பல்லாவரம் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம் (47) விவசாயி இவரது மனைவி அம்சா, 2 மகள் ஓரு மகன் உள்ளனர். நேற்று காலை இவர்கள் வீட்டை பூட்டி விட்டு விவசாய நிலத்துக்கு சென்றிருந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    விவசாய நிலத்தில் இருந்து திரும்பிய துலுக்கானம் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது கண்டு திடுக்கிட்டார். இது தொடர்பாக தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாரதி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×