search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வந்த விமானத்தில் ரூ.16 லட்சம் தங்கம் கடத்தல் - பயணியிடம் விசாரணை
    X

    சென்னை வந்த விமானத்தில் ரூ.16 லட்சம் தங்கம் கடத்தல் - பயணியிடம் விசாரணை

    சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது.
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரிப்கான் (வயது47) என்ற பயணியிடம் சோதனை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவரது சூட்கேசில் இருந்த கருப்பு நிற பையை திறந்து பார்த்தபோது அதில் 4 தங்க கட்டி துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

    550 கிராம் எடை கொண்ட அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.16.5 லட்சம் ஆகும். இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
    Next Story
    ×