என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்குன்றத்தில் நர்சை கடத்த முயற்சி- டாக்டர் மீது புகார்
Byமாலை மலர்5 Sep 2018 9:26 AM GMT (Updated: 5 Sep 2018 9:26 AM GMT)
செங்குன்றத்தில் நர்சை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் 108 ஆம்புலன்சு அலுவலகம் உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அவரிக்காடு பகுதியை சேர்ந்தகுமார் மனைவி தாமரைக்கனி நர்சாக பணி புரிந்து வந்தார்.
அங்கு வேலைபார்த்த டாக்டர் ஒருவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தாமரைக் கனிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி தாமரைக்கனி அப்போதே தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்சு தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த டாக்டர் அப்போதே வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தாமரைக்கனி தொடர்ந்து அந்த அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் தாமரைக்கனி நேற்று இரவு பாடிய நல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை தாக்கி கடத்த முயன்றனர். அவர்களிடம் இருந்து தாமரைக்கனி தப்பி வந்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
புகாரில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டரே ஆட்களை வைத்து தன்னை கடத்த முயன்றதாக கூறி இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்மநபர்கள் தாக்கியதில் தாமரைக்கனி பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #tamilnews
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் 108 ஆம்புலன்சு அலுவலகம் உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அவரிக்காடு பகுதியை சேர்ந்தகுமார் மனைவி தாமரைக்கனி நர்சாக பணி புரிந்து வந்தார்.
அங்கு வேலைபார்த்த டாக்டர் ஒருவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தாமரைக் கனிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி தாமரைக்கனி அப்போதே தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்சு தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த டாக்டர் அப்போதே வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தாமரைக்கனி தொடர்ந்து அந்த அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் தாமரைக்கனி நேற்று இரவு பாடிய நல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை தாக்கி கடத்த முயன்றனர். அவர்களிடம் இருந்து தாமரைக்கனி தப்பி வந்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
புகாரில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டரே ஆட்களை வைத்து தன்னை கடத்த முயன்றதாக கூறி இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்மநபர்கள் தாக்கியதில் தாமரைக்கனி பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X