search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடியதாக 16 பேர் கைது
    X

    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடியதாக 16 பேர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார், காவேரிப்பட்டணம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய மலையாண்டஅள்ளி முருகேசன் (வயது 36), சந்தாபுரம் கார்த்திக்(30), கொசமேடு வினோத்(28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 1800-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதே போல் நாகராஜபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு சூதாடிய தாம்சன்பேட்டை சண்முகம்(48), நாகராஜபுரம் முனிராஜ்(52) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 800 பறிமுதல் செய்யப்பட்டது.

    காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சூதாடி கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு பகுதியை சேர்ந்த பழனி(37), கிருஷ்ணகிரி கோட்டை தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(28) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 1100 பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3,700 பறிமுதல் செய்தனர்.

    மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அச்செட்டிப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அச்செட்டிப்பள்ளி வெங்கடசாமி (28), ராஜப்பா (34), கணேசன் (28), மற்றொரு கணேசன் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பென்னேஸ்வரம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடியதாக பென்னங்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (23), உஜயப்பா (30), கோட்டை வாசல் மோகன் (37), தேன்கனிக்கோட்டை வெங்கடேஷ் (35), மணிகண்டன் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு மாவட்டம் முழுவதும் சூதாடியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். 
    Next Story
    ×