search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே வி‌ஷவண்டு கடித்து 6-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே வி‌ஷவண்டு கடித்து 6-ம் வகுப்பு மாணவன் பலி

    காட்டுமன்னார்கோவில் அருகே வி‌ஷ வண்டு கடித்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரதீப்(வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் பிரதீப் விளையாடி கொண்டிருந்தான். அப்போது மூங்கில் மரத்தில் இருந்த வி‌ஷவண்டுகள் பறந்து வந்து பிரதீப்பை கடித்தது. இதில் வலிதாங்காமல் அவன் அலறினான். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தான்.

    அக்கம் பக்கத்தினர் பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

    அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் பிரதீப் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வி‌ஷ வண்டு கடித்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×