search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison bee bite"

    திருமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் வேலை பார்த்த 25 பேரை வி‌ஷவண்டு கொட்டியது. இதில் 25 பேரும் காயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகேயுள்ள பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(45). இவருடைய தோட்டத்தில் 25-க்கும் மேற்பட்டோர் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மரத்திலிருந்த 1000-க்கும் மேற்பட்ட வி‌ஷ வண்டுகள் பறந்து வந்து விவசாய பணியில் ஈடுபட்டவர்களை கொட்டியது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தோட்டத்தின் உரிமையாளர் கிருஷ்ணன் அவருடைய மகன் ஸ்ரீ வேலன் மற்றும் பொன்னுத்தாய், சாந்தி ஆகியோரின் உடலில் வி‌ஷ வண்டுகளின் கொடுக்குகள் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே வி‌ஷ வண்டு கடித்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரதீப்(வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் பிரதீப் விளையாடி கொண்டிருந்தான். அப்போது மூங்கில் மரத்தில் இருந்த வி‌ஷவண்டுகள் பறந்து வந்து பிரதீப்பை கடித்தது. இதில் வலிதாங்காமல் அவன் அலறினான். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தான்.

    அக்கம் பக்கத்தினர் பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

    அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் பிரதீப் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வி‌ஷ வண்டு கடித்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
    ×