search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
    X

    தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி

    மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மிட்டாநூல அள்ளி அருகே உள்ள ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 40). கட்டிட மேஸ்திரி. இவர் சொந்தமாக நிலத்தை வாங்கி வீடுகளை கட்டி விற்பனை செய்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை சம்பத் தடங்கம் அருகே சத்யா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் எடுத்து விடுவதாக சென்றார். அப்போது தண்ணீர் எடுத்து விடுவதற்காக மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்யும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பத் மாலை பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×