என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலையூரில் அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு. அரசு ஊழியரான இவரும், மனைவியும் சென்னை குறளகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களது மகன் கார்த்திக் (16). சற்று மனநலம் குன்றிய இவன் மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
தினமும் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு கார்த்திக் வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு ஆட்டோவில் பள்ளிக்கு செல்வான். நேற்று மாலை பிரபு வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
வீட்டின் பூட்டு உடைக்காமல் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும், ஆட்டோ டிரைவர் மீதும் சந்தேகம் இல்லை என்று பிரபு தெரிவித்தார்.
ஆனால் மனநலம் குன்றிய கார்த்திக்கை மர்ம நபர்கள் ஏமாற்றி வீட்டு சாவியை வாங்கி நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்