என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்1 Sep 2018 9:55 AM GMT (Updated: 1 Sep 2018 9:55 AM GMT)
வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கிறது.
கைதிகளை பார்க்கவரும் பார்வையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உணவு பொருட்களில் மறைத்து கொடுத்து விட்டு செல்கின்றனர்.
இதற்கு சில போலீசாரும் உடந்தையாக இருக்கின்றனர். சமீபத்தில் வேலூர் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தியபோது கத்தியை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில், ஆயுதப்படை டி.எஸ்.பி. விநாயகம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அறை எண் 6-ல் உள்ள கைதிகளிடம் இருந்து 5 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து, ஒட்டு மொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், ஜெயில் வளாகத்திற்குள்ளும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கஞ்சா கைப்பற்றப்பட்டது தொடர்பாக, பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கிறது.
கைதிகளை பார்க்கவரும் பார்வையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உணவு பொருட்களில் மறைத்து கொடுத்து விட்டு செல்கின்றனர்.
இதற்கு சில போலீசாரும் உடந்தையாக இருக்கின்றனர். சமீபத்தில் வேலூர் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தியபோது கத்தியை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில், ஆயுதப்படை டி.எஸ்.பி. விநாயகம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அறை எண் 6-ல் உள்ள கைதிகளிடம் இருந்து 5 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து, ஒட்டு மொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், ஜெயில் வளாகத்திற்குள்ளும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கஞ்சா கைப்பற்றப்பட்டது தொடர்பாக, பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X