என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரி அருகே மின்வாரிய ஊழியர் கொலை
Byமாலை மலர்31 Aug 2018 4:22 PM GMT (Updated: 31 Aug 2018 4:22 PM GMT)
சூளகிரி அருகே கள்ளக்காதலி வீட்டில் தங்கியிருந்த மின்வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்ட நிலையில் பாழடைந்த வீட்டின் முன்பு பிணமாக கிடந்தார்.
வேப்பனஹள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரலப்பா. இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றினார். சில பிரச்சினைகள் காரணமாக கடந்த 3 மாதத்துக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால் ஊர்சுற்றி வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விதவை பெண் சாக்கம்மா (வயது48) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. பெரும்பாலான நாட்களில் தனது வீட்டில் தூங்காமல் கள்ளக்காதலி வீட்டிலேயே சக்கரலப்பா தங்கி வந்தார்.
நேற்று இரவு கள்ளக்காதலி வீட்டில் தங்கி இருந்த சக்கரலப்பா இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள பாழடைந்த வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலி சாக்கம்மாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு கள்ளக்காதலிக்கும், சக்கரலப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் சாக்கம்மாவுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சக்கரலப்பா வேறு ஒரு இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது பிணத்தை தரதரவென்று இழுத்து வந்து பாழடைந்த வீட்டில் போட்டு சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கொலை செய்யப்பட்ட சக்கரலப்பாவுக்கு லட்சுமம்மா (35) என்ற மனைவியும், சேகர் (19) என்ற மகனும், ஷில்பா (21) என்ற மகளும் உள்ளனர்.
சக்கரலப்பா தொடர்பு வைத்திருந்த சாக்கம்மாவுக்கு ஷில்பா, ரூபா என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சாக்கம்மாவின் கணவர் சந்திரப்பா கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்த சாக்கம்மாவுக்கு கொலை செய்யப்பட்ட சக்கரலப்பா பண உதவிகள் செய்து வந்தார்.
கடந்த 3 மாதமாக சஸ்பெண்டில் இருப்பதால் அவருக்கு பண கஷ்டம் இருந்து வந்தது. இதனால் கள்ளக்காதலிக்கு சரியாக பண உதவிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கள்ளக்காதலி கொன்றாரா? அல்லது வேறு யாரும் அடித்து கொன்று பிணத்தை வீசிவிட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரலப்பா. இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றினார். சில பிரச்சினைகள் காரணமாக கடந்த 3 மாதத்துக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால் ஊர்சுற்றி வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விதவை பெண் சாக்கம்மா (வயது48) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. பெரும்பாலான நாட்களில் தனது வீட்டில் தூங்காமல் கள்ளக்காதலி வீட்டிலேயே சக்கரலப்பா தங்கி வந்தார்.
நேற்று இரவு கள்ளக்காதலி வீட்டில் தங்கி இருந்த சக்கரலப்பா இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள பாழடைந்த வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலி சாக்கம்மாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு கள்ளக்காதலிக்கும், சக்கரலப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் சாக்கம்மாவுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சக்கரலப்பா வேறு ஒரு இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது பிணத்தை தரதரவென்று இழுத்து வந்து பாழடைந்த வீட்டில் போட்டு சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கொலை செய்யப்பட்ட சக்கரலப்பாவுக்கு லட்சுமம்மா (35) என்ற மனைவியும், சேகர் (19) என்ற மகனும், ஷில்பா (21) என்ற மகளும் உள்ளனர்.
சக்கரலப்பா தொடர்பு வைத்திருந்த சாக்கம்மாவுக்கு ஷில்பா, ரூபா என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சாக்கம்மாவின் கணவர் சந்திரப்பா கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்த சாக்கம்மாவுக்கு கொலை செய்யப்பட்ட சக்கரலப்பா பண உதவிகள் செய்து வந்தார்.
கடந்த 3 மாதமாக சஸ்பெண்டில் இருப்பதால் அவருக்கு பண கஷ்டம் இருந்து வந்தது. இதனால் கள்ளக்காதலிக்கு சரியாக பண உதவிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கள்ளக்காதலி கொன்றாரா? அல்லது வேறு யாரும் அடித்து கொன்று பிணத்தை வீசிவிட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X