search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
    X

    கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

    கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவை வெள்ளலூரை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது மனைவி நிர்மலா (வயது 52). இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் வெள்ளலூரில் வாரச்சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதற்குள் நகைபறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி நகைபறிப்பு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×