என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூட்டுறவு வங்கியில் வேட்புமனு வாங்க அதிகாரிகள் வராததால் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
Byமாலை மலர்26 Aug 2018 5:42 PM GMT (Updated: 26 Aug 2018 5:42 PM GMT)
கூட்டுறவு வங்கியில் வேட்புமனு வாங்க அதிகாரிகள் வராததால் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு சங்க தேர்தல் பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மதியம் 12 மணி வரை வேட்பு மனு வாங்குவதற்கு தேர்தல் அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக வேட்புமனு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.இதையடுத்து அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அறிவிப்பு பலகையில் தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு சங்க தேர்தல் பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மதியம் 12 மணி வரை வேட்பு மனு வாங்குவதற்கு தேர்தல் அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக வேட்புமனு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.இதையடுத்து அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அறிவிப்பு பலகையில் தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X