search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு வங்கியில் வேட்புமனு வாங்க அதிகாரிகள் வராததால் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
    X

    கூட்டுறவு வங்கியில் வேட்புமனு வாங்க அதிகாரிகள் வராததால் அரசியல் கட்சியினர் சாலை மறியல்

    கூட்டுறவு வங்கியில் வேட்புமனு வாங்க அதிகாரிகள் வராததால் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு சங்க தேர்தல் பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மதியம் 12 மணி வரை வேட்பு மனு வாங்குவதற்கு தேர்தல் அதிகாரிகள் யாரும் வரவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக வேட்புமனு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.இதையடுத்து அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அறிவிப்பு பலகையில் தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 
    Next Story
    ×