search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மக்களுக்கு ரூ.2 கோடி நிவாரண உதவி பொருட்கள் அனுப்பப்பட்டது
    X

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மக்களுக்கு ரூ.2 கோடி நிவாரண உதவி பொருட்கள் அனுப்பப்பட்டது

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மக்களுக்கு நேற்று வரை 63 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். #keralarain
    நாகர்கோவில்:

    கேரளாவில் தொடர் மழை காரணமாக மண் சரிவு மற்றும் வெள்ள பாதிப்பை அடுத்து ஏராளமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

    நாகர்கோவிலில் இருந்தும் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குமரியில் இருந்து நேற்று வரை 63 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். தற்போது படிப்படியாக கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. முகாமில் இருக்கும் பொதுமக்களும் வீடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். மழை ஓய்ந்த நிலையில் கொசுக்கள் உற்பத்தியாகி விஷக்காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து கொசுக்களை கட்டுப்படுத்தும் விதமாக நாகர்கோவில் நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டது. 20 கொசு மருந்து தெளிப்பான் மேலும் 5 பெரிய டப்பாக்களில் ரசாயன மருந்துகளும் நேற்று கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு எந்திரங்கள் சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் வழங்கிய நிவாரண பொருட்களையும் கேரளாவிற்கு அனுப்பி வைத்தார். #keralarain 
    Next Story
    ×