என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே மினி லாரியை திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்24 Aug 2018 3:06 PM GMT (Updated: 24 Aug 2018 3:06 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே ரூ. 7.40 லட்சம் மதிப்புள்ள மினி லாரியை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(33). இவர் மினி லாரி உரிமையாளர். இவரது லாரி டிரைவர் மாதப்பன்(29) இவர் நேற்று காலை ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை பகுதியில் உள்ள கிருஷ்ணா கோவில் அருகில் மினி லாரியை நிறுத்திவிட்டு, பாம்பாறு அணையில் குளிக்க சென்றுள்ளார்.
பின்னர் வந்து பார்த்த போது ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் லாரியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது, ஊத்தங்கரையில், திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் லாரியில் இருந்த ஒரு வாலிபர் ஸ்பேர் பார்ட்ஸ்களை கழட்ட முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்து, அந்த வாலிபரைகையும், களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் பாரூர் அடுத்த புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த அரசகுமார்(எ)அரசு(29) என்பது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X