search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே மினி லாரியை திருடிய வாலிபர் கைது
    X

    கிருஷ்ணகிரி அருகே மினி லாரியை திருடிய வாலிபர் கைது

    கிருஷ்ணகிரி அருகே ரூ. 7.40 லட்சம் மதிப்புள்ள மினி லாரியை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(33). இவர் மினி லாரி உரிமையாளர். இவரது லாரி டிரைவர் மாதப்பன்(29) இவர் நேற்று காலை ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை பகுதியில் உள்ள கிருஷ்ணா கோவில் அருகில் மினி லாரியை நிறுத்திவிட்டு, பாம்பாறு அணையில் குளிக்க சென்றுள்ளார். 

    பின்னர் வந்து பார்த்த போது ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் லாரியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது, ஊத்தங்கரையில், திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் லாரியில் இருந்த ஒரு வாலிபர் ஸ்பேர் பார்ட்ஸ்களை கழட்ட முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்து, அந்த வாலிபரைகையும், களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார். 

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் பாரூர் அடுத்த புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த அரசகுமார்(எ)அரசு(29) என்பது தெரியவந்தது.
    Next Story
    ×