search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் மீண்டும் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
    X

    கோத்தகிரியில் மீண்டும் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பகல் நேரத்திலேயே சாலைகளில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த ஆண்டு தம்பதியை அடித்துக்கொன்ற கரடியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

    இந்த ஆண்டு கோத்தகிரி, அணைஹட்டி, தேன்மழை, கோர்பெட்டா, காந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைக்கு ஊடுபயிராக பேரிக்காய் பயிரிட்டுள்ளனர். தற்போது பேரிக்காய் நன்கு காய்த்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து கரடிகள் பேரிக்காய் தின்பதிற்காக தேயிலை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.

    இதைப்பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பகல் நேரத்தலேயே சாலைகளில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். இது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×