search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் பயணம்- தந்தைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
    X

    மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் பயணம்- தந்தைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

    மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பற்றி பொதுமக்கள் அவரது தந்தையிடம் புகார் செய்ய போவதாக கூறியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்கலம் அருகே உள்ள மாயனூரை சேர்ந்தவர் ராதா. (வயது 55). இவரது மகன் சிங்கிள் (18). இவர் மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர் மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பற்றி அவரது தந்தை ராதாவிடம் புகார் செய்ய போவதாக கூறினர்.

    இதனால் பயந்து போன சிங்கிள் தனது உடலில் மண்ணணை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வடபாதி மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    Next Story
    ×