என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்- 2 கட்டிட தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்23 Aug 2018 10:51 AM GMT
பாபநாசம் அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 கட்டிட தொழிலாளர்கள் பலியாயினர். விபத்து குறித்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே பண்டாரவாடை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் சந்தானதாஸ் (வயது 27), ஆனந்தராஜ் (22), லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் காணிக்கைராஜ் (50) இவர்கள் 3 பேரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை மெயின்ரோட்டில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற ஒரு வேன் அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சந்தானதாஸ், ஆனந்தராஜ் படுகாயம் அடைந்து சம்பவயிடத்திலேயே இறந்து விட்டனர். காணிக்கைராஜ் கை, கால்களில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பலியான சந்தானதாஸ், ஆனந்தராஜ் ஆகியோரின் உடல்கள் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், ஏட்டு சிவராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மீன் வண்டி வேன் டிரைவர் கொத்தங்குடி சபரி (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
பாபநாசம் அருகே பண்டாரவாடை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் சந்தானதாஸ் (வயது 27), ஆனந்தராஜ் (22), லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் காணிக்கைராஜ் (50) இவர்கள் 3 பேரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை மெயின்ரோட்டில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற ஒரு வேன் அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சந்தானதாஸ், ஆனந்தராஜ் படுகாயம் அடைந்து சம்பவயிடத்திலேயே இறந்து விட்டனர். காணிக்கைராஜ் கை, கால்களில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பலியான சந்தானதாஸ், ஆனந்தராஜ் ஆகியோரின் உடல்கள் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், ஏட்டு சிவராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மீன் வண்டி வேன் டிரைவர் கொத்தங்குடி சபரி (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X