என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்புத்தொழுகை- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகைக்கு பின், ஆயிரக்கணக்கான வீடுகளில் ஆடு, மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.
இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை 7 மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேலான பள்ளி வாசல்களில்,பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை தொடங்கியது.
ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் சார்பில் ராமநாதபுரம் - மதுரை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதே போல் கீழக்கரை தெற்குத்தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டி சார்பில் இஸ்லாமியா பள்ளி விளையாட்டு திடலில் தொழுகை நடந்தது.
தலைமை இமாம் முகம்மது இபுராகிம் குத்பா உரையாற்றினார். கீழக்கரையில் உள்ள 13-க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் சிறப்பு பெருநாள் தொழுகை நடந்தது.
தங்கப்பா நகர் மதரஷா, பாரதி நகர், ஏர்வாடி, எக்ககுடி, கமுதி. முதுகுளத்தூர், சாயல் குடி, பனைக்குளம், பெரிய பட்டினம், ரகுநாதபுரம், திருப்புல்லாணி, தேவி பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி உள்பட மாவட்டத்தின் அனைத்து பள்ளி வாசல்களிலும் தொழுகை நடந்தது.
தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு துவா நடந்தது. தொழுகை முடிந்ததும் உறவினர்களும், நண்பர்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல், மதரஸா மற்றும் வீடுகளில் நடைபெற்றது.
இதை தொடர்ந்து வீடுகளில் ஆடு, மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், த.மு.மு.க., சார்பில் இடங்களில் சிறப்புத்தொழுகை நடை பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்