search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே வாலிபர் கொலை
    X

    சேலம் அருகே வாலிபர் கொலை

    சேலம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

    சேலம்:

    சேலம், ஜாகீர் அம்மாப்பாளையம் பாரதியார் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மதுசூதனன் (வயது 32). திருமணம் ஆகவில்லை. கூலி தொழிலாளி.

    இவர் கோவை செல்வதற்காக நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள கோவிலில் உட்கார்ந்திருந்தார். அப்போது, அவரது தாய் அங்கு வந்து வீட்டிற்கு வருமாறு மதுசூதனனை அழைத்தார். அதற்கு அவர் நான், வெளியூர் செல்வதாக கூறி விட்டு அங்கு அமர்ந்திருந்தார். நண்பர்கள் 2 பேர் அங்கு வந்து மது குடிக்க செல்லலாம் எனக் கூறி மதுசூதனனை அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    அவர்கள் சேலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கிக்கொண்டு குடிப்பதற்காக நகரமலை அடிவாரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு வைத்து மது குடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்கள் சத்தம் போட்டு தகராறு செய்ததால் பக்கத்தில் குடியிருப்பவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அவர்களை பார்த்து நீங்கள் யாரும் எங்களை தடுக்கக் கூடாது. இங்கு வரக்கூடாது. எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வோம். நாங்கள் நண்பர்கள். தடுத்தால் உங்களை கொன்று விடுவோம் என்று ஆக்ரோசமாக கூறினார்கள்.

    இதனால் பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இன்று காலையில் அந்த பகுதியில் ரத்தம் ஆங்காங்கே உறைந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு வந்து ரத்தம் சிதறி கிடந்த பகுதிகளை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, அருகில் உள்ள கிணற்றில் மதுமசூதனன் பிணமாக கிடந்தார். அவரது உடலை சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து கொலை செய்து, 2 கைகளையும் கயிற்றால் இறுக்கமாக கட்டி கிணற்றில் தூக்கி வீசி சென்றுள்ளது தெரியவந்தது.

    சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×