என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
Byமாலை மலர்19 Aug 2018 5:31 PM GMT (Updated: 19 Aug 2018 5:31 PM GMT)
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கல்பாக்கம்:
கல்பாக்கத்தை அடுத்த வசுவ சமுத்திரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளராக வேலை செய்து வருபவர் மோகன்தாஸ் (வயது 54). கடந்த 16-ந் தேதி காலை பெட்ரோல் பங்க்கில் வசூல் செய்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்து, மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து கொண்டு கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள கனரா வங்கிக்கு சென்றார்.
வங்கியில் கூட்டமாக இருந்ததால் டீ குடித்து வர அருகில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கல்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X