என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டியில் திடீர் மண் சரிவு: கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
Byமாலை மலர்15 Aug 2018 5:58 PM GMT (Updated: 15 Aug 2018 5:58 PM GMT)
ஊட்டியில் திடீர் மண் சரிவால் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி பாபுஷாலைன் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர்கள் குடோன் உள்ளது. அந்த குடோனுக்கு கொண்டு வருவதற்காக கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிய பாரத்தோடு ஒரு லாரி அந்த பகுதியில் நின்றது. அந்த லாரியில் 280 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன.
இந்த நிலையில் நேற்று காலை லாரியில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை இறக்கி வைப்பதற்காக லாரியை நஞ்சநாட்டை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் இயக்க முயன்றார். ஊட்டியில் பெய்த தொடர் மழையால் மண் ஈரப்பதமாக இருந்தது. அப்போது திடீரென லாரியின் பின்பகுதி உள்ள இடத்தில் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது.
உடனே சுதாரித்து கொண்ட டிரைவர் ராஜேந்திரன் லாரியை விட்டு கீழே இறங்கினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட மண் சரிவால் லாரி சாலையில் உருண்டு கவிழ்ந்தது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் மற்றொரு புறம் இருந்த சாலையில் அங்கும், இங்கும் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் லாரி சேதமடைந்தது. கியாஸ் சிலிண்டர்கள் கசியாததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலையில் கிடந்த கியாஸ் சிலிண்டர்களை எடுத்து தனித்தனியாக அடுக்கி வைத்தனர். அதன் பின்னர் மற்றொரு வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் லாரியை அங்கிருந்து மீட்கும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து டிரைவர் ராஜேந்திரன் கூறும்போது, சாலையோரத்தில் மண் சரிவை ஏற்படுவதை அறிந்து நான் லாரியில் இருந்து கீழே குதித்து விட்டதால் உயிர் பிழைத்தேன், என்றார். தொடர் மழை பெய்ததாலும், லாரியின் பாரம் தாங்காமலும் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது என்று தெரிகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பாபுஷாலைன் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர்கள் குடோன் உள்ளது. அந்த குடோனுக்கு கொண்டு வருவதற்காக கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிய பாரத்தோடு ஒரு லாரி அந்த பகுதியில் நின்றது. அந்த லாரியில் 280 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன.
இந்த நிலையில் நேற்று காலை லாரியில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை இறக்கி வைப்பதற்காக லாரியை நஞ்சநாட்டை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் இயக்க முயன்றார். ஊட்டியில் பெய்த தொடர் மழையால் மண் ஈரப்பதமாக இருந்தது. அப்போது திடீரென லாரியின் பின்பகுதி உள்ள இடத்தில் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது.
உடனே சுதாரித்து கொண்ட டிரைவர் ராஜேந்திரன் லாரியை விட்டு கீழே இறங்கினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட மண் சரிவால் லாரி சாலையில் உருண்டு கவிழ்ந்தது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் மற்றொரு புறம் இருந்த சாலையில் அங்கும், இங்கும் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் லாரி சேதமடைந்தது. கியாஸ் சிலிண்டர்கள் கசியாததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலையில் கிடந்த கியாஸ் சிலிண்டர்களை எடுத்து தனித்தனியாக அடுக்கி வைத்தனர். அதன் பின்னர் மற்றொரு வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் லாரியை அங்கிருந்து மீட்கும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து டிரைவர் ராஜேந்திரன் கூறும்போது, சாலையோரத்தில் மண் சரிவை ஏற்படுவதை அறிந்து நான் லாரியில் இருந்து கீழே குதித்து விட்டதால் உயிர் பிழைத்தேன், என்றார். தொடர் மழை பெய்ததாலும், லாரியின் பாரம் தாங்காமலும் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X